Posts

Showing posts from September 21, 2009

வாழ்க ஜனநாயகம்

நம் நாட்டில் கருத்து சொல்ல எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. யார் வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும், கருத்து சொல்லலாம். யாரைப் பற்றி வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் சொல்லலாம். எழுதலாம். பரபரப்புச் செய்திகள் வெளியிடலாம். கோர்ட்டில் வழக்கு போடலாம். வாய்தா வாங்கலாம். காசு கொடுத்து சரி பண்ணலாம். கட்சி மாறியதும் இழுத்துக் கொண்டிருந்த வழக்கை வழுக்கையாக மாற்றலாம். எப்போதும் ஆட்சியை ஆதரித்து அமைப்பை நடத்தலாம். வயிறு வளர்க்கலாம். கல்லூரி கட்டலாம். நன்கொடை வசூலிக்கலாம். எம். எல். ஏக்கள் படி உயர்வு கேட்கலாம் . அணுகுண்டு வெடித்து சோதனை செய்யலாம். சோதனை வெற்றி பெறலாம். வெற்றிப் பெறாமல் போகலாம். வெற்றிப் பெற்றால் கொண்டாடலாம். பெருமை அடையலாம். சோதனை முடிவினைப் பற்றி கருத்து சொல்லலாம். வந்த கருத்தை உடனே சொல்லி இருக்கலாம். பத்து வருடங்கள் கழித்து அதைப் பற்றிச் சொல்ல வேண்டிய உரிமை இருக்கலாம். திரு. சந்தானம் இந்தியாவின் அணு ஆயுத சோதனைப் பற்றி இப்போது சந்தேகம் கிளப்ப வேண்டிய அவசியம் என்ன ? என்கிற கேள்விக்கு பதில் தேடவேண்டும் என்கிற அவசியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதைப் பற்றிப்