Posts

Showing posts from September 6, 2009

படிக்கலாமா...

கல்லூரி காலத்திலே தினமும் நூலகம் சென்று படிக்கின்ற நல்ல பழக்கம் இருந்து வந்தது. சற்றேரக்குறைய பதினைந்து வருடங்களாக, இந்த பழக்கம் விடுபட்டு விட்டது. மீண்டும் முயல திட்டம். நடக்குமா பார்ப்போம். !!!! சில வருடங்களுக்கு முன்பாக, என்னுடைய தின குறிப்பேட்டினில் இதனை நினவு கூர்ந்து எழுதியிருந்தது தற்போது கண்ணில் பட்டது. அது பின்வருமாறு.. ....ரொம்ப நாட்களாக ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வருகிறேன். எழுத வேண்டும் என்றால் படிக்கவும் வேண்டும் அல்லவா... ? படிக்க வேண்டிய புத்தகங்கள் ஏராளம் என்னிடம் உள்ளன. அவையெல்லாம் கடமைக்காக. அப்பாவின் நிரந்தர வைப்பு நிதியில் இருந்து பணம் கட்டிய பட்ட மேற்ப்படிப்புக்காக, வந்த புத்தகங்கள். சில புத்தகங்களை இன்னமும் திறக்கக் கூட இல்லை. கல்லூரி காலத்தே, கவிஞனாகவும், கலையார்வம் நிரம்பியும் கலகலவென நண்பர்கள் சூழவும் இருந்து களித்த நினைவு வந்தது. அவ்வப்போது எழுதி வந்த கவிதைகளை, ப்ரசுரிக்க எந்த பத்திரிக்கையும் விரும்பாது என்ற நம்பிக்கையால் , எப்போதும் பத்திரிக்கைக்கு எதையும் அனுப்பி வைத்தது இல்லை... சந்தா உட்பட !!.. அவ்வப்போது நூலகங்களில் படிப்பதோடு சர