Posts

மனநிலை ..

எதாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து யோசித்து யோசித்து ரெண்டு வாரங்களை நகர்த்தி விட்டேன்.. இனிமேலும் எதுவும் எழுத வில்லை என்றால் அது தமிழினத்திற்கு நான் செய்கின்ற பெரிய துரோகமாக இருக்கும் என்று தோன்றியது. தமிழினத்திற்கு பெரிய துரோகம் என்று நினைத்த போது, இலங்கை ஈழம் நினைவுக்கு வராமல் இல்லை.. அமைதியையும், அகிம்சையையும் போதித்த பௌத்த மதத்தை , மதிக்கும் பெரும்பான்மை மக்கள் வாழும் இலங்கையில் , சில காலங்களுக்கு முன்பு வரை , தினமும் , நூற்றுகனக்கானவர்கள் செத்து மடியும் செய்தி கேட்டு கேட்டுப் பழகி இருந்த காதுகளுக்கு இப்போது அப்படிப்பட்ட செய்திகள் வருவதில்லை என்பதை நினைத்து மகிழ்வதா.. இல்லை, தீவிரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில், பல லட்சக்கணக்கான பொதுமக்களையும் பலி கொண்ட அந்த சோக வரலாற்றை நினைத்து வருத்தபடுவதா.. அல்லது, அந்த நேரத்தில், தமிழை மிக அழகாக போற்றியும், பேசிகொண்டிருந்த சகோதர சகோதரிகள் உயிர் துறக்கும் நேரம், கையாலாகாத தலைவர்கள், டெல்லிக்கு கடிதம் எழுதி பொழுதை கடத்தி கொண்டிருந்த மான்பை எண்ணி வேதனை படுவதா என்ற , ஒரு விதமான புரிந்தும் புரியாத , உண்மை நிலவரத்தை ஏற்றுக்கொண்டும், ...

Feb 2010

மை நேம் இஸ் கான் - சமீபத்தில் நான் பார்த்து ரசித்தத் திரைப்படங்களில் ஒன்று.. ஷாருக் கானுக்கு இது இன்னொரு மைல் கல்.. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.. தமிழ் படம் பார்க்கும் வாய்ப்பு தள்ளிப் போய் கொண்டே இருக்கின்றது.. கடந்த வாரம் மும்பை பீ வீ ஆரில் பார்த்த தமிழ் படம் தீராத விளையாட்டுப் பிள்ளை- நல்ல படம்பா. Tendulkar - scored 200 vs South ஆப்ரிக்கா இப்போது ரசித்து பார்த்து கொண்டு இருப்பது... W R வரதராஜன் - முது பெரும் கம்யூனிஸ்ட் தலைவரின் முடிவு அதிர்ச்சி அடைய வைத்தது.. மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய தலைவர்கள் இது போன்ற முடிவு எடுப்பது நல்லதல்ல.. அது போக, சமீப காலமாக அதிகரித்து வரும் தற்கொலைகள் கவலை தருகின்றது.. காரணங்கள் வேறு வேறாக இருந்தாலும் இழப்பது விலை மதிப்பில்லாத உயிர் அல்லவா ? எல்லாம் வல்ல இறைவன் அவர்கள் தயை புரிவார்களாக..

"முதலில், நான் ஒரு இந்தியன். !! "

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், " நான் மகாராஷ்டரியன் என்பதில் மிக்கப் பெருமை கொள்கிறேன், ஆனால், முதலில், நான் ஒரு இந்தியன். !! " என்று சொல்லிய சச்சினை முதலில் வாழ்த்துவோமே !! சச்சின் மகாராஷ்ட்ராவுக்கு ஒன்றும் செய்ததில்லை எனவும், வினோத் காம்ப்ளிக்கு அவர் உதவி செய்யவில்லை என்றும் சிவ சேனாவின் சஞ்சய் ராவத் இன்றைய சாம்னா பத்திரிக்கையில் எழுதி இருக்கின்றார்.. சச்சின் இந்திய அணியில் இருப்பது கிரிக்கெட் விளையாட மட்டும் தான்..அன்றி, தனது மாநிலத்திலிருந்து விளையாட வந்த அனைவரையும் தூக்கி விடுவதற்கு அல்ல... காங்கிரஸ் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்க துவங்கி இருக்கிறது.. மகாராஷ்ட்ராவில், தமிழ் நாடு போல் நடிகர்கள் அரசியல் செய்ய முடியாது. கோவிந்தா ஒரு சிறிய உதாரணம். ஆனால், சச்சின், நிலைமை அவ்வாறு இல்லை.. வயது , மதம், மாநிலம் வேறுபாடின்றி பெரும்பான்மையான கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பும் உலகின் சிறந்த கிரிகெட் வீரர்.. சிவ சேனா தேவை இல்லாமல், சச்சின் விவரத்தை பெரிய விஷயமாக ஆக்குகிறதாகத் தோன்றுகிறது. பால் தாக்ரே இப்போது எதற்காக சச்சினை வம்பிற்கு இழுக்கின்றார் ? பாவம் !!! அவருக்கு ராஜ் தாக்ர...

இந்தியா சாம்பியன் .. ?

Image
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் முக்கியமான கிரிக்கெட் போட்டி தற்போது மழை காரணமாக தடை பட்டிருக்கிறது. இதனை எழுதிகொண்டிருக்கும் போது கூட ஆட்டம் முடித்துகொள்ளப்பட்டதக்க அறிவிக்கப் பட்டிருக்கிறது. இனி ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணியுடனான ஆட்டத்தில் தோல்வி அடைந்து, பின், இந்திய அணி மேற்கு இந்திய அணியை வென்றால் மட்டுமே இந்தியா அணி அரை இறுதியில் நுழையும் வாய்ப்பை பெறும்.எனினும், நம்முடைய வாழ்த்துக்கள் அணிக்கு உரித்தாகட்டும்.மேலே காணப்படும் படம் இந்திய அணியின் 2008 முதலான ஆட்டங்களின் முடிவின் trend ஐக் கொடுக்கின்றது. (கொஞ்சம் டைம் கிடைத்ததால் எக்ஸ்செல் உபயோகித்து சார்ட் போட்டு டைம் பாஸ் செய்தேனாக்கும்... )

வாழ்க ஜனநாயகம்

நம் நாட்டில் கருத்து சொல்ல எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. யார் வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும், கருத்து சொல்லலாம். யாரைப் பற்றி வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் சொல்லலாம். எழுதலாம். பரபரப்புச் செய்திகள் வெளியிடலாம். கோர்ட்டில் வழக்கு போடலாம். வாய்தா வாங்கலாம். காசு கொடுத்து சரி பண்ணலாம். கட்சி மாறியதும் இழுத்துக் கொண்டிருந்த வழக்கை வழுக்கையாக மாற்றலாம். எப்போதும் ஆட்சியை ஆதரித்து அமைப்பை நடத்தலாம். வயிறு வளர்க்கலாம். கல்லூரி கட்டலாம். நன்கொடை வசூலிக்கலாம். எம். எல். ஏக்கள் படி உயர்வு கேட்கலாம் . அணுகுண்டு வெடித்து சோதனை செய்யலாம். சோதனை வெற்றி பெறலாம். வெற்றிப் பெறாமல் போகலாம். வெற்றிப் பெற்றால் கொண்டாடலாம். பெருமை அடையலாம். சோதனை முடிவினைப் பற்றி கருத்து சொல்லலாம். வந்த கருத்தை உடனே சொல்லி இருக்கலாம். பத்து வருடங்கள் கழித்து அதைப் பற்றிச் சொல்ல வேண்டிய உரிமை இருக்கலாம். திரு. சந்தானம் இந்தியாவின் அணு ஆயுத சோதனைப் பற்றி இப்போது சந்தேகம் கிளப்ப வேண்டிய அவசியம் என்ன ? என்கிற கேள்விக்கு பதில் தேடவேண்டும் என்கிற அவசியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதைப் பற்றிப் ...

சில நேரங்களில்..

ஒரு தொலை இயக்கியின் கதை... ஒரு சுபயோக சுபதினத்தில் எனது வீட்டில் இருக்கின்ற தொலை காட்சிப் பெட்டியை இயக்கச் செய்கின்ற தொலை இயக்கியின் செயல்பாடு நின்று விட்டது. தொலை இயக்கியின் உயிர் போன்ற மின்சார குளிகை (பாட்டரிக்கு வேறு ஏதாவது தமிழ்ச் சொல் இருக்கின்றதா ? ) இரண்டையும் மாற்றிப் பார்த்த பின்பும் செயல்பட வில்லை. என்னவென்று சொல்வது.. தொலைக் கட்சிப் பெட்டி அருகினில் சென்று ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றிக்கொண்டிருக்கப் பொறுமை இல்லை. எனது குழந்தை செய்வதைப் போன்று கீழே தரையில் டொக் டொக் என்று தட்டியும் பார்த்தாகி விட்டது. ஒன்றும் பிரயோஜனமில்லை. வேறு வழியின்றி எழுந்து சென்று தொலைக் கட்சிப் பெட்டி அருகில் நின்று ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றி மாற்றிப் பார்க்க வேண்டியதாகி விட்டது. எனினும் இந்த விஷயத்தில் சில நன்மைகளும் இருக்கின்றன. அவை கீழ்கண்டவாறு.. நிமிடத்திற்கு ஒருமுறை அலைவரிசை மாற்றப்படுவதில்லை. தொலைக் காட்சிப் பெட்டியிலேயே கண்கள் நிலை குத்திகொண்டிருக்கும் அவலம் இல்லை. எழுந்து சென்று அலைவரிசை மாற்றி மாற்றி, பின் மீண்டும் இருக்கையில் அமர்ந்து பார்க்கின்ற பொறுமை இழந்து, வேறு வேலைகளில் கவனம...

சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

இந்த மாதம் சனிப் பெயர்ச்சி நிகழப் போவதாகத் தெரிகின்றது. அதனுடைய பலா பலன்கள் இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டது. சில வாரங்களாக இரவு பத்து மணிக்கு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த நான், இப்போது ஒன்பது மணி வாக்கில் வர ஆரம்பித்து இருக்கிறேன். புள்ளி மேலே புள்ளி வைத்து கோலம் போட்டுகொண்டிருந்த சன் டிவியும், கோலங்கள் தொடரில் , தோழர் என்று அன்போடு அழைக்கப்படும் கதாபத்திரத்தை இன்று கோபம் கொள்ளச் செய்து, சபதமிட வைத்து விட்டார்கள். போதாக் குறைக்கு அபியும் இன்று கோபம் கோபமாக பேசினார். கூடிய விரைவில் முடித்து விடுவார்கள் என்றுத் தோன்றுகிறது. சனிப் பெயர்ச்சி காரணமாக இருக்குமா ? அரசி தொடர் கூட கிளைமாக்ஸ் நெருங்கி விட்டது போல் தோன்றுகின்றது. சிறு வயதில், எனது தாத்தாவிடம் இந்த மாதிரி பெயர்ச்சிகளைப் பற்றிக் கேட்டதுண்டு. "ஏன் தாத்தா, குருப் பெயர்ச்சி தான் ஆச்சே.. எனக்கு இந்த வாட்டியும் கணக்கு ல சிக்ஸ்டி மார்க்ஸ் மேல வரவில்லையே .. எப்போ தாத்தா நான் ஹன்ட்ரட் அவுட் ஆப் ஹன்ட்ரட் வாங்குவேன் ?" ஒழுங்க படிப்பான்னு ஓங்கி ஒன்னு கொடுக்காம, " அதுவா, இப்போ வக்கிரச்சிண்டு இருக்கு .. இன்னும் கொஞ்ச நாள்ல எல்...